Skip to main content

சோழன் பயணம் 3 - Temple Payanam ?

                  

பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்
விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை
புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல்
தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும்.
இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும்
முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக்
கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை
இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன.
இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச்
செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள்,
அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய
வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள்.
பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக
உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர்
தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத்
தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக்
கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில்
திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க
வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை
வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”.
என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப்
பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல்
தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே
நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி,
தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள்,
அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும். பல
கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய
நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய
செய்திகளையும் குறிக்கின்றன. சில கோவில் சுவர்களில்
தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர்
பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல்
வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி
புரிதல் காணலாம். இவையே அன்றி, இக்கல் வெட்டுகளால்
அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி - நடை
மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து,
பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய
இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால்
நன்குணர்தல் கூடும்.


Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 3 - கோனார்க் கோவில் - Temple Payanam

             !   Sun Konark Temple   ! ------------------------------&-------------------------- கோனார்க் கோவில், உதாரணமாக, நதி தெய்வங்கள் (கங்கை மற்றும் யமுனை). பொதுவாக நாகராவில் உள்ள கர்ப்பகிரகத்தின் நுழைவாயிலில் காணப்படும் கோவில், துவாரபாலர்கள் ( கதவு காவலர்கள் ) பொதுவாகக் காணப்படும் திராவிடக் கோயில்களின் நுழைவாயில்கள் அல்லது கோபுரங்கள், இதேபோல், மிதுனங்கள் (சிற்றின்ப படங்கள்), நவக்கிரகங்கள் (ஒன்பது மங்களகரமானவை கிரகங்கள்) மற்றும் யக்ஷர்களும் கூட நுழைவாயில்களில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு. முக்கிய தெய்வீகத்தின் பல்வேறு வடிவங்கள் அல்லது அம்சங்கள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும். தெய்வங்கள் திசைகள், அதாவது, அஷ்டதிக்பாலர்கள் எட்டு விசையை எதிர்கொள்கின்றனர் கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும்/அல்லது மீது திசைகள் ஒரு கோவிலின் வெளிப்புற சுவர்கள். சுற்றிலும் துணை கோவில்கள் முக்கிய கோயில் குடும்பம் அல்லது அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது முக்கிய தெய்வம். இறுதியாக, அலங்காரத்தின் பல்வேறு கூறு...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - பாகம் 1

               சதுர் முகிலிங்கம் - நச்னா- குத்தாரா (உள்படம்) சிவன் கோவில், நச்னா-குத்தாரா, மத்தியப் பிரதேசம், ஐந்தாம் நூற்றாண்டு கி.பி. ----------------------------------&--------------------- பெரும்பாலான கலை மற்றும் கட்டிடக்கலை எச்சங்கள் எஞ்சியுள்ளன பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவில் இருந்து மதம் உள்ளது இயற்கை. மக்களிடம் கலை இல்லை என்று அர்த்தம் இல்லை அந்த நேரத்தில் அவர்களின் வீடுகள், ஆனால் உள்நாட்டு குடியிருப்புகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன மரமும் களிமண்ணும் அழிந்துவிட்டன. இந்த அத்தியாயம் அறிமுகப்படுத்துகிறது இந்தியாவில் இருந்து பல வகையான கோவில்களுக்கு நாங்கள் செல்கிறோம். எங்களிடம் இருந்தாலும் அத்தியாயத்தின் முடிவில், பெரும்பாலும் இந்துக் கோவில்களில் கவனம் செலுத்துகிறது முக்கிய பௌத்தம் மற்றும் ஜெயின் பற்றிய சில தகவல்களை நீங்கள் காணலாம் கோவில்களும். இருப்பினும், எல்லா நேரங்களிலும், நாம் மனதில் கொள்ள வேண்டும் பல உள்ளூர் வழிபாட்டு முறைகளுக்காக மத வழிபாட்டுத் தலங்களும் உருவாக்கப்பட்ட...