Skip to main content

சோழன் பயணம் 3 - Temple Payanam ?

                  

பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்
விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை
புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல்
தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும்.
இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும்
முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக்
கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை
இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன.
இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச்
செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள்,
அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய
வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள்.
பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக
உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர்
தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத்
தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக்
கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில்
திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க
வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை
வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”.
என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப்
பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல்
தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே
நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி,
தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள்,
அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும். பல
கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய
நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய
செய்திகளையும் குறிக்கின்றன. சில கோவில் சுவர்களில்
தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர்
பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல்
வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி
புரிதல் காணலாம். இவையே அன்றி, இக்கல் வெட்டுகளால்
அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி - நடை
மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து,
பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய
இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால்
நன்குணர்தல் கூடும்.


Comments

Popular posts from this blog

கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பம் - நாகார கோவில் , பாகம் - 2 - Temple Payanam

                                    நாகரா கோவில் _____________________________________ !.விதிஷாவிற்கு அருகிலுள்ள பிரதேஷ், எரான், நச்னா-குத்தாரா மற்றும் உதயகிரி மத்திய பிரதேசத்தில். இந்தக் கோயில்கள் எளிமையான கட்டமைப்புகள் ஒரு வராண்டா, ஒரு மண்டபம் மற்றும் பின்புறம் ஒரு சன்னதி ஆகியவற்றைக் கொண்டது. இந்து கோவிலின் அடிப்படை வடிவம் இந்து கோவிலின் அடிப்படை வடிவம் உள்ளடக்கியது பின்வருபவை : (i) கருவறை (கர்பக்ரிஹா உண்மையில் 'கர்ப்ப வீடு'), இது ஒற்றை நுழைவாயிலுடன் ஒரு சிறிய அறை மற்றும் காலப்போக்கில் பெரிய அறையாக வளர்ந்தது. கர்ப்பக்கிரகம் என்பது முக்கிய ஐகானையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சடங்கு கவனம் ; (ii) கோவிலின் நுழைவாயில் இது ஒரு போர்டிகோ அல்லது கொலோனேட் மண்டபமாக இருக்கலாம் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கான இடத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு மண்டபம் என்று அறியப்படுகிறது; (iii) சுதந்திரமான கோவில்கள் மலை போன்ற கோபுரத்தைக் கொண்டிருக்கும் வட இந்தியாவில் வளைந்த சிகரத்தின் வடிவம்...

TEMPLE ARCHITECTURE AND SCULPTURE - Party 5 - Vishnu Temple Khajuraho - Temple Payanam , Temple History ?

                    Vishnu Temple  ---------------------------------------------------------- * விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் கோவில் ஒரு என்று தவறாகக் கருதப்பட்டது தசாவதார கோவில். உண்மையில், அது உண்மையில் யாருக்கு என்று தெரியவில்லை நான்கு துணை கோவில்கள் இருந்தன முதலில் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளன விஷ்ணுவின் மூன்று முக்கிய நிவாரணங்கள் கோவில் சுவர்கள்: ஷேஷசயனம் தெற்கு, நர-நாராயணன் மீது கிழக்கு மற்றும் கஜேந்திரமோக்ஷம் மேற்கு. கோயில் மேற்கு நோக்கி உள்ளது, இது மிகவும் குறைவான பொதுவானது கோவில்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உள்ளன. பல சிறிய கோவில்கள் பரிமாணங்கள் இருந்தன ஒரு காலத்தில் கட்டப்பட்டது. மாறாக, நாம் படித்தால் கஜுராஹோவின் கோயில்களை உருவாக்கியது பத்தாவது இடத்தில் சண்டேலா கிங்ஸ் நூற்றாண்டு, அதாவது சுமார் நானூறு கோவிலுக்குப் பிறகு பல ஆண்டுகள் தியோகர், எப்படி என்று பார்க்கலாம் வியத்தகு முறையில் நகரா கோயிலின் வடிவம் மற்றும் பாணி கட்டிடக்கலை வளர்ந்தது.  கஜுராஹோ லக்ஷ்மணா கோவில் அர்ப்பணிக்கப்பட்டது விஷ்ணு, 95...

TEMPLE ARCHITECTURE AND SCULPTURE - Part - 6 - Sun temple, Modhera, Gujarat Temple Payanam

                      ! Sun templebModhera Gujarat ! ---------------------------------------------------------- * மேற்கு இந்தியா உட்பட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள கோவில்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான், மற்றும் ஸ்டைலிஸ்டிக்காக நீட்டிக்கக்கூடிய, சில நேரங்களில், மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிக்கு, எந்த ஒரு விரிவான வழியிலும் சேர்க்க முடியாத அளவுக்கு அதிகமானவை. பயன்படுத்திய கல் கோயில்களை வண்ணத்திலும் வகையிலும் கட்ட வேண்டும்.  மணற்கல் மிகவும் பொதுவானது, சாம்பல் நிறமானது பத்தில் சிலவற்றில் கருப்பு பசால்ட்டைக் காணலாம் பன்னிரண்டாம் நூற்றாண்டு கோவில் சிற்பங்கள் வரை. மிகவும் மிகுந்த மற்றும் புகழ்பெற்றது கையாளக்கூடிய மென்மையானது வெள்ளை பளிங்கு சிலவற்றிலும் காணப்படுகிறது பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஜெயின் கோவில்கள் மவுண்ட் அபு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டு கோயில் ரணக்பூர். மிக முக்கியமான கலை-வரலாற்று தளங்களில் இப்பகுதியில் குஜராத்தில் சாம்லாஜி உள்ளது பிராந்தியத்தின் முந்தைய கலை மரபுகள் எவ்...